முகப்பு
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை
தமிழ்நாடு

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாடு

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை
பகிர்:

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

நீர் இருப்பைப் பொருத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நீர்வளத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் ,  பூசாரிநாயக்கன் ஏரி  பாசனப்பரப்பு பயனடையும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் இருப்பைப் பொறுத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு 20.09.2022 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. 

இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →