முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! டிச. 27ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிச. 27 ஆம் தேதி என நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 20 டிசம்பர், 2022 at 3:26 PM
கோப்புப்படம்
பகிர்:

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிச. 27 ஆம் தேதி என நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில், முக்கியப் பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர்.அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில் ஓபிஎஸ், தான் நியமித்த புதிய தலைமைக் கழக நிர்வாகிகளுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நாளை ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். 

இருவரும் போட்டி போட்டுகொண்டு கூட்டம் நடத்துவதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.