நீட்: காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு
நீட் தேர்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் காலை 11 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதைப் புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்ட வாய்ப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன. கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் இறுதியில் தீர்மானமாக வெளியிடப்படவுள்ளன.