முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு

நேர்காணல் முடிவடைந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

நேர்காணல் முடிவடைந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது.

கரோனா பரவல் காரணமாக முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,. கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, முதன்மைத் தேர்வு(எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. 

இதில் தேர்ச்சியானவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 

இன்றுடன் நேர்காணல் முடிவடைந்ததையடுத்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை https://www.tnpsc.gov.in என்ற தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →