முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு தீவிர பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
பகிர்:


குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரர்கள், பார்வையாளர்களுக்கு 344 மருத்துவ பணியாளர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

மேலும், வரவேற்பு பாடலில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒலிம்பியாட் வரவேற்பு பாடல், வீரர்களை வரவேற்பதற்கான பாடல் தானே தவிர பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என சுட்டிக்காட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.