முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை 2 வாரத்தில் முடிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை 2 வாரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை 2 வாரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேலை வாங்கித் தருவதாக ரூ.65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் என்.சுப்பிரமணியன் மீது சேலத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், என்.சுப்பிரமணியன் மீதான வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.