தமிழ்நாடு

செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னை செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத் துறையினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

DIN

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னை செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத் துறையினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செட்டிநாடு குழுமம் சிமென்ட் தொழிற்சாலை,மின்சாரம் தயாரிப்பு,மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

இந்த குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித் துறை, அந்த குழுமத்துக்கு சொந்தமான சுமாா் 50 இடங்களில் சோதனை 9.12.2020-இல் செய்தது. பல நாள்கள் நடைபெற்ற இந்த சோதனையில், அந்த நிறுவனம் சுமாா் ரூ.700 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கணக்கில் வராத ரூ.23 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, திருச்சியில் அந்தக் குழுமத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா். சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சோதனை நடைபெற்ாக அத்துறையினா் கூறினா்.

இந்த சோதனை 5 இடங்களில் நிறைவு பெற்றது. எழும்பூரில் அந்த குழுமத்தின் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT