கி.வீரமணிக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய முதல்வர் 
தமிழ்நாடு

கி.வீரமணிக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய முதல்வர்!

திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

DIN

சென்னை: திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை  திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

தகைசால் தமிழா் விருது, 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா யுனிவர்ஸ் வருமா? ரிஷப் ஷெட்டி பதில்!

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT