வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய அடுத்த புகைப்படத்தை பகிர்ந்த இஸ்ரோ!
இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.