முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி: விபத்துகளை தடுக்க சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க கோரிக்கை

அவிநாசி நகரப் பகுதிகளில் விபத்துகளை தடுக்க சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்.
பகிர்:

அவிநாசி: அவிநாசி நகரப் பகுதிகளில் விபத்துகளை தடுக்க சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம்,  பேரூராட்சி நிர்வாகத்திடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 

அவிநாசி நகர வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் ஒவ்வொரு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகளின் முன் பகுதியில் நடைபாதைகளில் நடப்பதற்க்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடையூராக புதிதாக கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.  சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து உருவாகியுள்ள கடைகளால் பெரும் விபத்து, பல உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.  மேலும் சாலை ஓரமாக நடக்க வேண்டிய பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளால், சாலை நடுவே செல்லும் வாகனங்களை ஒட்டி நடக்கின்றன. 

ஆகவே சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →