தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

DIN

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்  3,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

முன்னதாக 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 3,000 கன  அடி நீர் திறக்கப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு அதிகரித்து வருவதால், ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்து வருகிறது.

தற்போது ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 24 அடியில் 22.69 அடியாகவும் கொள்ளளவு 3,038 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT