தூத்துக்குடி விமான நிலையம் 
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, 3 நாள்களுக்கு பிறகு சென்னை - தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT