தமிழ்நாடு

சென்னையில் 98% பேருக்கு நிவாரணம் தரப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை பெரம்பூரில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதாவது, கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடத்துகிறார். இதுதான் திராவிட மாடல். எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. மனிதர்கள் அனைவரும் சமம்தான் என்பது சமத்துவம்.  இந்தியா பல்வேறு மதத்தினை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து வரும் நாடு. 
திராவிட மாடல் அரசில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மக்களின் ஒற்றுமையை ஒரு கூட்டம் பிரிக்க நினைக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என கபட நாடகம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கபட நாடகத்தை பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். வெள்ளம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT