நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று (டிச. 26) ஆஜரானார்.
பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், கோச்சடையான் பட விவகாரத்தில் என் பெயரை வேண்டுமென்றே தொடர்புப்படுத்தி வருகின்றனர். கோச்சடையான் வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
படிக்க | பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர், முதல்வர் பங்கேற்பு!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர், இறுதியில் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததால் மிகவும் வருத்தப்பட்டேன் எனக் குறிப்பிட்டார்.
கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று (டிச. 26) உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.