விஜயகாந்த் மறைவு: நாளை (டிச.29) படப்பிடிப்புகள் ரத்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட உள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், கட்சித் தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க: ’எதற்கும் அஞ்சாத துணிச்சல்..’: கமல்ஹாசன் இரங்கல்!
இந்நிலையில், விஜயகாந்த்தின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (டிச.29) படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.