முகப்பு
தமிழ்நாடு

அதிமுக இணைவதற்கான காலம் வந்துவிட்டது: சசிகலா பேட்டி

அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருவந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

Updated On : 3 பிப்ரவரி, 2023 at 2:34 PM
சசிகலா (கோப்புப் படம்)
பகிர்:


அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருவந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 54ஆம் ஆண்டு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. அதிமுகவை முழுமையாக புரிந்து கொண்டால் பாஜகவை தேடிச் செல்லும் தவறுகள் நடக்காது. 

Advertisement

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். 

தனித்தனியாக இருந்து செயல்படுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.