தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் பிப். 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

DIN

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

வருகிற  பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.

அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மழை பிரேக்! சென்னையில்?

அம்பேத்கர் நினைவு நாள்: துணை முதல்வர் மரியாதை

சென்னையிலிருந்து 25 இண்டிகோ விமானங்கள் ரத்து! கலக்கத்தில் பயணிகள்!!

மம்மூட்டியின் களம்காவல் படத்தை வியந்து பாராட்டிய தி கேர்ள்பிரண்ட் இயக்குநர்!

அறிவுச்சூரியன் அம்பேத்கர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT