தமிழ்நாடு

புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்!

புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.

DIN

புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடக்கி வைத்தார். 

இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

இதன்பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வி சேர்க்கை 27% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்

2,112 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

697 கிலோ போலி டீ தூள் பறிமுதல்

கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகள் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT