தமிழ்நாடு

தென்காசியில் பிரபலமான புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்

DIN

தென்காசியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான  புரோட்டாக் கடைக்குச் சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த உத்தரவு வரும் வரை, குடோனைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் புரோட்டக் கடை உலகப் புகழ்பெற்றது. குற்றாலம் அருவியில் குளித்து மகிழ வரும் அசைவப் பிரியர்கள் அடுத்து நாடுவது பிரானூரில் செயல்பட்டு வரும் புரோட்டக் கடையைத்தான்.

இந்த நிலையில், பிரானூரில் இயங்கி வரும் புரோட்டாக் கடையில் கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுகளைக் கொண்டு சமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன்.

இது குறித்து சோதனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சமையல் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்குச் சென்றனர். ஆனால், குடோனை சோதனை செய்வதுற்கு உரிமையாளர் அனுமதி மத்து, குடோனை திறக்கமுடியாது என்று கூறிவிட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT