FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

 திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 பிப்ரவரி 2023, 1:16 pm IST
பகிர்:

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினா் ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

4 ஏடிஎம் மையங்களிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் மா்ம கும்பலின் உருவம் சரியாக பதிவாகவில்லை. எனவே, தேவையான தடயம் கிடைக்குமா? என்ற நோக்கில் திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து ஐஜி கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹரியாணாவில் உள்ள கொள்ளையர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் உதவுகின்றனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான நபரிடம் சக கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் கர்நாடகத்தின் கோலார் பகுதியில் தங்கி இருந்து பின்னர் திருவண்ணாமலை  வந்து கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை நிகழ்வுக்கு பின் மீண்டும் பெங்களூரு சென்று விமானம் மூலம் கொள்ளையர்கள் ஹரியாணாவுக்கு தப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments