முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:37 AM
அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் வருகை
பகிர்:

காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக உறுதியளித்திருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

முதலாவதாக காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அதன்படி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசினர்.

செல்வப்பெருந்தகை பேசுகையில், "திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடம் கலந்து ஆலோசிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டிருக்கிறது. எந்தவித பிரச்னையும் இல்லை.

இந்த கூட்டணி கொள்கை கூட்டணி, இயற்கையான கூட்டணி, நம்பிக்கையுள்ள உறுதியான கூட்டணி, தமிழ்நாட்டைக் காக்கும் கூட்டணி, மதவாதிகளை விரட்டும் கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

summary

CM stalin confirms giving one Rajya Sabha seat to Congress: selvaperunthagai

முழு கட்டுரையைப் படிக்க →