திருவாரூரில் பிப்.25-ல் பள்ளிகள் இயங்காது!
திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 25ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 2,3ம் தேதிகளில் பள்ளி விடுமுறை விடப்பட்ட காரணத்தால், பிப்ரவரி 18,25ம் தேதிகளில் பள்ளி செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பிப்.18,25 ஆகிய தேதிகளில் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.