கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல் கொள்முதல்: ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

DIN

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஏற்கெனவே 19% ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT