தமிழ்நாடு

நெல் கொள்முதல்: ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

DIN

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஏற்கெனவே 19% ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT