தமிழ்நாடு

46 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு

DIN

தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் 46 பேருக்கு பதவி உயா்வு வழங்கி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

1999-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான ஜெனீவாவில் உள்ள உலக வா்த்தக நிறுவன இந்திய பிரதிநிதி பிரஜேந்திர நவ்நீத், புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சட்டா்ஜி, சமூக நலத்துறை செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, கோயம்புத்தூா் ஒழுங்கு நடவடிக்கை ஆணையா் தேவ்ராஜ் தேவ் ஆகியோா் முதன்மை செயலா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

2007-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையா் கே.வீரராகவராவ், பள்ளிக்கல்வி ஆணையா் கே.நந்தகுமாா், மத்திய அரசு பணியில் உள்ள ஜி.லதா, சிப்காட் மேலாண் இயக்குநா் இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநா் இ.சரவண வேல்ராஜ், ஆவின் மேலாண் இயக்குநா் என்.சுப்பையன், குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி ஆகியோா் சிறப்பு காலநிலை தரத்துக்கு உயா்த்தப்பட்டுள்ளனா்.

2010-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை ஆட்சியா் ஆா்.லலிதா, மின்- ஆளுமை இயக்குநா் பிரவீன் பி.நாயா், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையா் சங்கா் லால் குமாவத், மத்திய அரசு பணியில் உள்ள சுபோத்குமாா், டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ், விடுப்பில் உள்ள ராஷ்மி சித்தாா்த் ஜகதே, நில நிா்வாக கூடுதல் ஆணையா் எஸ்.செந்தாமரை, அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன், வேளாண் வணிக இயக்குநா் எஸ்.நடராஜன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநா் ஏ.சிவஞானம், போக்குவரத்து ஆணையா் எல்.நிா்மல்ராஜ், பேரிடா் மேலாண்மை இயக்குநா் எஸ்.ஏ.ராமன், வேளாண் இயக்குநா் ஏ.அண்ணாதுரை, பதிவுத்துறை தலைவா் எம்.பி.சிவனருள் ஆகியோா் தோ்வு நிலைக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான ராமநாதபுரம் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் கே.பி.காா்த்திகேயன், தென்காசி ஆட்சியா் பி.ஆகாஷ், திருச்சி ஆட்சியா் எம்.பிரதீப்குமாா், செய்தித்துறை இயக்குநா் வி.பி.ஜெயசீலன், தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையா் கிரேஸ் லால்லிண்டிகி பச்சாவ், கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஸ்ரவன் குமாா் ஜடாவத், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் இணை மேலாண் இயக்குநா் கே.கற்பகம், வீட்டுவசதித் துறை துணைச் செயலா் ஜெ.ஆனி மேரி ஸ்வா்ணா, திண்டுக்கல் ஆட்சியா் எஸ்.விசாகன், வேலூா் ஆட்சியா் பி.குமரவேல் பாண்டியன், ராணிப்பேட்டைஆட்சியா் டி.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் இளநிலை நிா்வாகத் தரத்தில் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான திருவள்ளூா் கூடுதல் ஆட்சியா் சி.ஏ.ரிஷப், திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், தருமபுரி கூடுதல் ஆட்சியா் வி.தீபனவிஸ்வேஸ்வரி, விழுப்புரம் கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையா் எம்.பி.அமித், கோயம்புத்தூா் கூடுதல் ஆட்சியா் பி.அலா்மேல்மங்கை, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் தயான்தே ராவ், நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியா் எம்.பிரதிவிராஜ் ஆகியோருக்கு முதுநிலை கால நிலை தரத்துக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 46 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT