தமிழ்நாடு

திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்கள் திருட்டு!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்களை வெட்டி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

DIN

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்களை வெட்டி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், மா.புடையூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகையில் வசித்து வருபவர் நாராயணசாமி (70) விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் அனுமதி பெற்று சந்தனம் மரம் நட்டு வளர்த்து வந்தார். தற்போது, இந்த மரங்கள் வெட்டும் பருவத்தில் இருந்ததாம். 

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நாராயணசாமி நிலத்திற்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 11 மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

SCROLL FOR NEXT