முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

எடப்பாடி அருகே தேநீர் அருந்த வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 25 ஜனவரி, 2023 at 4:09 PM
பகிர்:

எடப்பாடி அருகே தேநீர் அருந்த வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி அருகே தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைக்கு இளைஞர் ஒருவர் வந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் தீ பிடித்தது.

இதனையடுத்து, செய்வதறியாது திகைத்த இளைஞர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மேலும் பரவ தொடங்கியதை அடுத்து கடையில் உள்ள ஊழியர்களும் இணைந்து தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, அதிர்ஷ்டவசமாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.