தமிழ்நாடு

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

DIN

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ராஜாஜி பூங்கவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில் ராஜ்  கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

இப்பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் வாக்களிப்பதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்- மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT