தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தினம்: நாகை துறைமுகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படையில் சென்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

DIN

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படையில் சென்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாகப்பட்டினம் கடற்படை முகாமில் இருந்து சார் ஆட்சியர் தலைமையில் விசைப்படையில் சென்ற கடற்படையினர், மீன்வளத் துறையினர் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர். 

இதில் நாகப்பட்டினம் கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர், அக்கரைப்பட்டி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

நீதிமன்ற LOGO, நீதிபதி கையெழுத்துடன் Mail!! புதிய வகை மோசடியில் சிக்காதீர்கள்!

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

SCROLL FOR NEXT