முகப்பு
தமிழ்நாடு

புகையிலைப் பொருள் மீதான தடைநீக்கம்: அன்புமணி எச்சரிக்கை

புகையிலைப் பொருள்கள் மீதான தடை நீக்கம், தமிழகத்தைப் போதைக் காடாக்கிவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி எச்சரித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:50 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

புகையிலைப் பொருள்கள் மீதான தடை நீக்கம், தமிழகத்தைப் போதைக் காடாக்கிவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையா் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Advertisement

இந்தத் தீா்ப்பு பெரும் அதிா்ச்சியளிக்கிறது. போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும்.

புகையிலைப் பொருள்கள் மீதான தடை நீக்கம் தமிழகத்தைப் போதைக் காடாக்கி விடும். தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3 ஆயிரம் டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குட்கா மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் அனைத்து பெட்டிக் கடைகளிலும் குட்கா விற்பனை அதிகாரப்பூா்வமாக தொடங்கிவிடும். அதன் தீயவிளைவுகள் கற்பனை செய்து பாா்க்க முடியாதவை.

எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.