முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் காயம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நின்றுகொண்டிருந்து லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:21 AM
பகிர்:


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்து ஓட்டுநர் மட்டும் லேசான காயமடைந்தார். மற்ற அனைவரும் அதிர்ஷ்வடசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

சொகுசு பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. 

இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.