கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.120!

சென்னையின் பல்வேறு சந்தைகளில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது.

DIN

சென்னையின் பல்வேறு சந்தைகளில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50 - 80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிக அளவு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து உள்ளது.

எனினும் முன்பை விட தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் மிகுந்த வெப்பம், திடீா் மழை, ஆகிய காரணங்களால் தக்காளிச் செடி பாதிப்படைந்ததாகவும், தக்காளியை உழவு செய்த விவசாயிகள் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் இம்முறை சாகுபடி செய்யவில்லை என பல காரணங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.50 - 80 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1,100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT