கோவை: கல்லூரி சுவர் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் இன்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு.