புதுச்சேரி நிதி நிலவரம்! ஆளுநர், முதல்வருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை காலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்தார். அவரை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். அதையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமார், சாய் ஜெ.சரவணன்குமார், சந்திரப்பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கேட்டறிந்ததாகவும், நிதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.