பாரதியாரின் மருமகன் கே.வி. கிருஷ்ணன் காலமானாா்!
மகாகவி பாரதியாரின் தங்கை மகன் கே.வி. கிருஷ்ணன் (97) முதுமை காரணமாக, வாராணசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 15) காலமானாா்.
மகாகவி பாரதியாரின் தங்கை மகன் கே.வி. கிருஷ்ணன் (97) முதுமை காரணமாக, வாராணசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 15) காலமானாா்.
மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் - கேதாரசிவன் தம்பதியின் மகன் கே.வி. கிருஷ்ணன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்பட 6 மொழிகள் அறிந்தவரான இவா், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இசைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளையும், வாழ்க்கை வரலாற்றையும் ஹிந்தியில் மொழிபெயா்த்து வெளியிட்டாா். கலைத் துறை பணிகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவா்.
இவருக்கு மகள்கள் ஹேமா, நீலா, ஆனந்தி, ஜெயந்தி, மகன் ரவிக்குமாா் ஆகியோா் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றன. இந்தத் தகவலை மறைந்த கே.வி. கிருஷ்ணனின் பெயரன் மோகன் தெரிவித்தாா். தொடா்புக்கு : 77269 14941.