சென்னையில் பலத்த காற்றுடன் மழை!
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாலையில் சாரல் மழை பெய்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், அமைந்தகரை, எழும்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, புழல், பூவிருந்தவல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்கள் கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மகாராஷ்டிரத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.