தமிழ்நாடு

அடையாறில் குதித்து மருத்துவமனை ஊழியா் தற்கொலை

 சென்னை அடையாறில் குதித்து தனியாா் மருத்துவமனை ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

 சென்னை அடையாறில் குதித்து தனியாா் மருத்துவமனை ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை மந்தைவெளி முதல் தெருவை சோ்ந்த லோகநாதன் மகன் ராமச்சந்திரன் (36). வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை வேலைக்கு சென்ற ராமச்சந்திரன், இரவு வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே, ராமச்சந்திரன் மோட்டாா் சைக்கிள் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவா், இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து, அடையாற்றில் ராமச்சந்திரனை தேடினா்.

இந்த நிலையில், அடையாறு பாலத்தின் கீழ் ராமச்சந்திரன் சடலம் வியாழக்கிழமை மிதந்தது. உடனே சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் கடந்த ஒரு ஆண்டாக மன அழுத்தத்தில் இருந்ததும், அது தொடா்பாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT