தமிழ்நாடு

சென்னையில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம்!

சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் நாளை(ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ள இந்த நிகழ்வுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

1997ஆம் ஆண்டு டைடல் பூங்காவை ஏற்படுத்தி தொழில்நுட்பத்துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார். சென்னையில்  உலக தரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’ அமைக்கப்படும்.

பல நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அமையவுள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமானது கருணாநிதியின் பெயரை நூற்றாண்டு கடந்து எடுத்துச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT