தமிழ்நாடு

நொய்டாவில் 25 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

நொய்டாவில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

DIN

நொய்டாவில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

கொளதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங்கின் அறிவுறுதலின்படி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தொழிலாளர் துறை, மாவட்ட தகுதிகாண் அலுவலகம், நொய்டா சைல்ட்லைன் கூட்டாக இணைந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கும், குழந்தைகளை பிச்சையெடுக்க செய்வதைத் தடுப்பதற்கும் சிறப்பு பிரசாரம் நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு சந்தைகளில் மற்றும் சாலைகளில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்த சுமார் 25 குழந்தைகள் கடந்த ஒருநாளில் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2016யின் படி 14 வயதிற்குள்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT