தமிழ்நாடு

நொய்டாவில் 25 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

நொய்டாவில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

DIN

நொய்டாவில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

கொளதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங்கின் அறிவுறுதலின்படி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தொழிலாளர் துறை, மாவட்ட தகுதிகாண் அலுவலகம், நொய்டா சைல்ட்லைன் கூட்டாக இணைந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கும், குழந்தைகளை பிச்சையெடுக்க செய்வதைத் தடுப்பதற்கும் சிறப்பு பிரசாரம் நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு சந்தைகளில் மற்றும் சாலைகளில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்த சுமார் 25 குழந்தைகள் கடந்த ஒருநாளில் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2016யின் படி 14 வயதிற்குள்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

SCROLL FOR NEXT