முகப்பு
தமிழ்நாடு

பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.

Updated On : 11 ஜூன், 2023 at 12:41 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:30 PM

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் வழியாக செல்லும் மின்சார ரயில்கள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல் நிறுத்தப்பட்டது.

Advertisement

தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டியை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்த பின்னர், திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. ரயில் பெட்டி  தடம் புரண்டதில் பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.