வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திற்கு அபராதம் விதித்த சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகன உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த நான்கு நாள்களாக வேலூரில் உள்ள அவர் வீட்டிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு திடீரென அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த செய்தியை பார்த்த போது, சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் துறையினர் அனுப்பியதாக உள்ளது.
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள சாலையில் உள்ள சிக்னலில் நிறுத்திய போது, வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்தியதாக உங்கள் வாகனத்திற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்திyஇல் தெரிவித்திருந்தனர்.
அதைப் பார்த்த சுரேஷ்குமார் நான் சென்னை பக்கமே போனதில்லை. வேலூரில் உள்ள எங்கள் வீட்டில் கடந்த நான்கு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்ட எனது வாகனத்திற்கு சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து துறையினர் ரூ.500 அபராதம் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறி வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிக்க: ஒரு மரத்தை வெட்டினால் 12 மரங்களை நட வேண்டும்: உயர்நீதிமன்றம்
இவ்வாறு அடிக்கடி குறுஞ்செய்தி மாறி வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.