முகப்பு
தமிழ்நாடு

கடலூர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

கடலூர்: கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

கடலூரிலிருந்து திருவண்ணாமலை சென்ற பேருந்தும் பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற பேருந்தும் இன்று நேருக்குநேர் மோதியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 96-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் நேற்று ஒருவர் பலியானார். இந்நிலையில், சிகிச்சை பலனின்று இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்குநேர் மோதியததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →