தமிழ்நாடு

புதுச்சேரியில் சலுகையில் வாங்கிய பீர் பாட்டிலில் காகிதம்: மதுபிரியர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் சலுகையில் வாங்கிய பீர் பாட்டிலில் காகிதம் இருந்ததால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

DIN

 
புதுச்சேரி: புதுச்சேரியில் சலுகையில் வாங்கிய பீர் பாட்டிலில் காகிதம் இருந்ததால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது. இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர். அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3 ஆவது பீரை குடிப்பதற்காக கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்காமல், இதனை வெயியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.

தற்போது, பீர் பாட்டிலில் காகிதம் கிடந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் மின்னணு பொருள்கள், கார் விற்பனை மந்தமாகவே இருக்கும்!

மலைத்தேன்... அஞ்சு குரியன்!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

SCROLL FOR NEXT