தமிழ்நாடு

ரூ.63 லட்சம் பணமோசடி: தம்பதி கைது!

திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர்  வியாழக்கிழமை இரவு  கைது செய்தனர்.

DIN

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர்  வியாழக்கிழமை இரவு  கைது செய்தனர்.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா ராணி (30). இவரிடம் திருப்பத்தூர் என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ஹேமாவதி (28), அவரது கணவர் பிரவீன்குமார் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து ஜமுனாராணியிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சம் லாபம் வரும் என்று ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பிய ஜமுனாராணி ரூ.63 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ய கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதில் சில லட்சங்களை மட்டும் ஹேமாவதி, பிரவீன்குமார் பங்கு சந்தையில் முதலீடு செய்து மீதி பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஜமுனா ராணி கேட்டதற்கு பங்கு சந்தையில் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக நஷ்டம் அடைந்து விட்டதாக அவர்கள் கூறினர். இந்தநிலையில் தன்னிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக ஜமுனா ராணி திருப்பத்தூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை நடத்தினார். 

அதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஹேமாவதி மற்றும் பிரவீன்குமாரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுகாவல் துறையினர்  கைது செய்து சிறையிலடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT