கோப்புப் படம். 
தமிழ்நாடு

காலை சிற்றுண்டி திட்டம்: உணவு பட்டியல் மாற்றியமைப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் சாா்பில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூகநலத்துறை முதன்மைச்செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும். உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக அரிசி, கோதுமை, ரவா, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறி ஆகியவை அடங்கிய உணவு வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT