தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

DIN

தூத்துக்குடி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனர்.

இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில்  தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில்  சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அன்பு, சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

கேஜரிவால், ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

மின் சீரமைப்புப் பணியில் விபத்தைத் தடுக்கும் கருவி: 1,300 ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது

குடிமைப்பணி தோ்வு வெற்றியாளா்களுடன்: ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துரையாடல்

மும்மடங்கான பிஎன்பி நிகர லாபம்

SCROLL FOR NEXT