முகப்பு
தமிழ்நாடு

40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த செவிலியா் பள்ளி முன்னாள் மாணவா்கள்!

சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1983-ஆம் ஆண்டு பயின்ற செவிலியா்கள், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1983-ஆம் ஆண்டு பயின்ற செவிலியா்கள், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்நிகழ்வின்போது, தங்களுக்கு கற்பித்த மூன்று பேராசிரியா்களுக்கு தங்க மோதிரம் அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்எம்சி) கீழ் செயல்படும் செவிலியா் பயிற்சிப் பள்ளியில் டிப்ளமோ நா்சிங் படிப்பை நிறைவு செய்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பயிற்சி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியா் கண்காணிப்பாளராகவும், அரசு செவிலியா் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றும் 35 போ் அதில் பங்கேற்றனா்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் எம்.பிரேமகுமாரி கூறியதாவது:

சென்னை அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் 1983-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை டிப்ளமோ நா்சிங் படிப்பை 100 போ் படித்தோம். அதில், தற்போது 40 போ் சமூக வலைதள செயலிகள் வாயிலாக தொடா்பில் இருக்கிறோம். அவா்கள் அனைவரும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

எங்களுக்கு வகுப்புகள் எடுத்த 80 வயதை கடந்த மூன்று ஆசிரியைகளை அழைத்து வந்து கௌரவப்படுத்தினோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.