மா. சுப்பிரமணியன் / ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

ஆளுநருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். 

DIN


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். 

கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. 

பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தர ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 5ஆம் தேதி நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT