முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி!

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.10 லட்சமும், கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →