தமிழ்நாடு

தலைவாசல், கெங்கவல்லியில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது

தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை கைது

DIN

தலைவாசல்: தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ள போலீசாக், அவர்களிடம் இருந்து 260 லிட்டர் பாக்கட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தலைவாசல் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், வீட்டில் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த
ஊனத்தூர் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் அருள்மணி (28) மற்றும் சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28), அதேபோல் கெங்கவல்லி அருகே  சாத்தாப்பாடி பகுதியில் சாராயம் விற்பனை செய்த ஆத்தூர் அருகே புங்கவாடி புதூரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சிவக்குமார் (37) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 260 லிட்டர் கள்ளச்சாராய பாக்கட்டுகளையும் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அவர்களை ஆத்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT