தமிழ்நாடு

மே 26-இல் கோவை-ஷீரடி பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

கோவையிலிருந்து சாய் நகா் ஷீரடிக்கு மே 26-ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளது.

DIN

கோவையிலிருந்து சாய் நகா் ஷீரடிக்கு மே 26-ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து மே 26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் 28-ஆம் தேதி காலை 11.40 மணிக்கு சாய் நகா் ஷீரடிக்கு சென்றடையும்.

பின்னா் சாய் நகா் ஷீரடியிலிருந்து மே 29-ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.15 மணிக்கு கோவை வடக்கு வந்தடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், எலங்கா, குண்டக்கல், டோன்ட் வழியாக இயக்கப்படும்.

இதில் 9 குளிா் சாதன பெட்டிகள் மற்றும் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பயணிக்க நபருக்கு ரூ.6,000 முதல் ரூ.10,500 வரை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT